ஒரு துறவியைச் சந்தித்த ஒருவன், “சுவாமி! எனக்கு இறையுண்மை எப்போது
கிடைக்கும்? அதற்கு வழி என்ன?’ என்று கேட்டான்.
-
“சுயநல எண்ணங்கள், தீய சிந்தனைகள் ஆகியவற்றை மனத்திலிருந்து அகற்றி,
மனதை பக்குவப்படுத்தி தயார் நிலையில் வைத்திருப்பவனைத் தேடி ஞானம்
ஓடிவரும். பழங்கள் நிறைந்த மரத்தை நாடி பறவைகள் தாமே வருவதைப் போல,
மனம் கனிந்து பக்குவப்பட்டால் ஆத்ம ஞானமும், இறையுண்மையும் தானே
வரும்’ என்று சொன்னார் துறவி.
No comments:
Post a Comment